Thirupugal song for changing destiny

 Sage idaikadar has advised to recite thiru pugal song for changing our destiny. It should be recited while coming girivalam in thiruvannamalai.

உங்கள்  விதியை மாற்றும் மகத்தான அந்த திருப்புகழ் பாடல் )



முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்



முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்



பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்



பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே



தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்



திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்



கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை



கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே


https://siththanarul.blogspot.com/2025/10/1960-1.html?m=1


Comments

Popular posts from this blog

Vel maaral by vallimalai swamigal

Pathigam for job

Tirupathi Venkatachalapathy Temple - Kongana siddhar Jeeva Samathi